அன்புஜோதி ஆசிரம வழக்கு:கைதான நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு


அன்புஜோதி ஆசிரம வழக்கு:கைதான நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 16 March 2023 6:45 PM GMT (Updated: 16 March 2023 6:46 PM GMT)

அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை, சிலர் மாயமான சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், பணியாளர் சதீஷ் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வேடம்பட்டு சிறையில் இருந்த ஜூபின்பேபி, சதீஷ் ஆகியோரையும், கடலூர் சிறையில் இருந்த மரியா ஜூபினையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, 3 பேருக்கும் மேலும் 14 நாட்கள் அதாவது வருகிற 30-ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story