வேடசந்தூர் அருகே சிறுமியின் வாயில் துணி வைத்து அடைத்து கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி கைது


வேடசந்தூர் அருகே சிறுமியின் வாயில் துணி வைத்து அடைத்து கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி கைது
x

வேடசந்தூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தந்து மனைவி 8 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமி 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் சக சிறுமிகளுடன் சேர்ந்து அங்குள்ள கோவில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சைக்கிளில் ஐஸ் மற்றும் சமோசா விற்பனை செய்துகொண்டு வேடசந்தூர் சாலைத்தெருவைச் சேர்ந்த முகமதுரபீக் (வயது50) என்பவர் வந்துள்ளார். அப்போது அவர் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டியும், சக்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணி வைத்து அடைத்துள்ளார்.

இதைபார்த்த அங்கிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஐஸ் வியாபாரி முகமதுரபீக்கை சிறைபிடித்தனர். இது தொடர்பாக கூம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முகமதுரபீக்கை கைது செய்தனர்.

வேடசந்தூர் அருகே சிறுமியை கட்டி வைத்து கடந்த முயன்ற சம்பவத்தால் ஐஸ் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story