அடகுக்கடைக்குள் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பு


அடகுக்கடைக்குள் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பு
x

அடகுக்கடைக்குள் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி ஆர்.சி.எஸ். மெயின் ரோட்டில் நகை அடகுக்கடை உள்ளது. இந்த கடைக்குள் நேற்று மாலை 8 அடி நீளமுள்ள சாரைபாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் அலறியடித்து வெளியே ஓடினர். இது நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story