முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

ஒடுகத்தூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1988 முதல் 94 வரையில் பயின்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒடுகத்தூரை அடுத்த குருவராஜ பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தற்போது வேலூர், காஞ்சீபுரம், சென்னை, பெங்களூரு, டெல்லி, கோயம்புத்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவ- மாணவிகள் 70 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விஜயா கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். வேதியல் ஆசிரியர்ராஜசேகரன், விலங்கியல் துறை ஆசிரியர் கேசவன், பொருளாதார துறை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் முருகன் காணொலி காட்சி மூலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாணவ மாணவிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியினை முன்னாள் மாணவர்கள் குபேந்திர ராஜு மற்றும் சரத் சந்தர் ஆகியோரும் மாணவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை தண்டபாணி, தனசேகர், மகாலட்சுமி, வசந்தி ஆகியோர்செய்திருந்தனர். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கவுரவித்தல் மற்றும் நலிவுற்ற முன்னாள் மாணவர்களுக்கு உதவுதல் மற்றும் பல்வேறு சேவை திட்டங்களை செய்வதாக தெரிவித்தனர்.


Next Story