முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

ஆம்பூர் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பாவில் நகராட்சி தொடக்க பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் கடந்த 1990-1991-ம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி பள்ளி வளாகத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களும் பங்கேற்றனர். மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


Next Story