முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

திசையன்விளையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1978-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் மாணவர் தாமஸ் திலிபன் தலைமை தாங்கினார் உவரி ராஜன் கிருபாநிதி முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.


Next Story