பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்


பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்
x

தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

சென்னை,

நாடு முழுவதும் பா.ஜ.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் உறுப்பினராக பிரதமர் மோடி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்கிறார். அன்றைய தினம் தமிழ்நாட்டிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது. மூத்த தலைவரான எச்.ராஜா முதல் உறுப்பினராக இணைகிறார். இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது பழைய உறுப்பினர்களும் தங்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம் என்றும் புதிதாகவும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பூத்திலும் குறைந்தப்பட்சம் 200 பேரை சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினர் சேர்க்கைக்கு '8800002024' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு வரும் லிங்கை திறந்து அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை எழுதி அனுப்பினால் போதும். உடனே அவர்கள் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story