தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை


தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை
x

தடகள போட்டியில் பேட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர், முதியோர், மிக மூத்தோர் ஆகிய பிரிவுகளில் நடந்த கால்பந்து, கையுந்து பந்து, கேரம், கபடி, மேசை பந்து போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதி பெற்ற மாணவர்கள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த தடகளப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றனர். இப்பள்ளி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளது. மாணவர்களை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், சாம் நியூட்டன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பியூலா ராஜ செல்வி, கல்வி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.


Next Story