யோகாசன போட்டியில் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவர் சாதனை


யோகாசன போட்டியில் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவர் சாதனை
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 11:17 AM GMT)

உலக யோகாசன போட்டியில் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

தாய்லாந்து நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் எஸ்.எஸ்.அமுதன் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார். சாதனை படைத்த மாணவரை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் செயலாளரும், எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தாளாளருமான எஸ்.டி.முருகேசன் பாராட்டினார்.


Next Story