திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து


திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:47 PM GMT)

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

விழுப்புரம்

திண்டிவனம்,

சென்னையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49). இவர் தனது மனைவி மற்றும் மகன் ஹரிஷ் (12) ஆகியோருடன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் புறப்பட்டார்.

திண்டிவனம் அடுத்த சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி திடீரென பிரேக் பிடித்ததாக தெரிகிறது.

இதனால் கார் மினி லாரியின் பின்பகுதியில் மோதி நின்றது. தொடர்ந்து சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் காரின் பின்பகுதியில் மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் ஹரிஷ் என்ற சிறுவனுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் கார் மற்றும் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி் வருகின்றனர்.


Next Story