பள்ளிபாளையத்தில் அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து


பள்ளிபாளையத்தில்  அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து
x

பள்ளிபாளையத்தில் அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து

நாமக்கல்

பள்ளிபாளையம்:

குமாரபாளையத்தில் இருந்து நேற்று காலை பள்ளிபாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை சாமிநாதன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ் பள்ளிபாளையத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதியதுடன், சுவரில் ஏறி நின்றது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட பஸ்சில் பயணம் செய்த 23 பயணிகள் காயங்கள் இன்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் கிரேன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story