விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து   இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம்
x

ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து இ்ந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி

ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகளுடன், போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் ஜெயபாரதி, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வழக்கம் போல் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story