பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ்


பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ்
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் அருகே உள்ள சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 68). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பூங்காவனத்திடம் நாங்கள் நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறாம். உங்களிடம் பழைய நகை இருந்தால் தாருங்கள். அதனை நாங்கள் பாலிஷ் போட்டு புதியது போன்று மாற்றி தருகிறோம் என கூறினர். அதனை நம்பிய பூங்காவனம் தன்னிடம் இருந்த 3 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மர்மநபர்கள் 2 பேரும் மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டனர். அப்போது அவர் வீட்டிற்குள் சென்று தண்ணீர் கொண்டு வருவதற்குள் அந்த மர்ம நபா்கள் 2 பேரும் நகையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.




Next Story