வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 30 Oct 2022 6:45 PM GMT (Updated: 30 Oct 2022 6:45 PM GMT)

சிவகிரியில் வீட்டின் படிக்கட்டில் இருந்து பெண் தவறி விழுந்து இறந்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி இல்லம் வடக்கு தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மனைவி பாலம்மாள் (வயது 52). இவர் நேற்று முன்தினம் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது வீட்டின் படிக்கட்டில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் கீழே கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் இவரை மீட்டு ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பாலம்மாள் இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story