லாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது


லாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது
x

லாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம்:

கோட்டைப்பட்டினம் கடை வீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிழக்கு சாலை வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து, லாரி டிரைவர் நத்தம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story