ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

நாகையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்


நாகையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் வாலிபர் பிணம்

நாகை நல்லியான் தோட்டம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக நாகை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இறந்து கிடந்தவர் நீலம் மற்றும் சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட்டும், டவுசரும் அணிந்திருந்தார்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story