வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது


வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 7:40 AM GMT)

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

நாகப்பட்டினம்

நாகை அருகே நரிமணம் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரகசிய தகவல்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தனிப்படை போலீசாருக்கு நரிமணம் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

வீட்டில் கஞ்சா செடி

இந்த தகவல் அறிந்ததும் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த குமார் மகன்கள் பிரகாஷ்(வயது21), ராகுல்(18) ஆகியோர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது தெரிய வந்தது. இதையடுத்து ராகுலை தனிப்படை போலீசார் பிடித்து நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ராகுலை கைது செய்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள பிரகாசை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story