கியாஸ் விற்பனை நிலைய பகுதியில் கருவேல மரங்களில் திடீர் தீ


கியாஸ் விற்பனை நிலைய பகுதியில் கருவேல மரங்களில் திடீர் தீ
x

கியாஸ் விற்பனை நிலைய பகுதியில் கருவேல மரங்களில் திடீர் தீ ஏற்பட்டது.

கரூர்

மதுரை - சேலம் பைபாஸ் சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே தனியார் கியாஸ் விற்பனை நிலையம் பின்புறம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. முட்புதற்காட்டில் இருந்த செடிகள் காய்ந்து கருகி நின்றதால், செடிகளில் தீ மளமளவென பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தின் காரணமாக பை-பாஸ் சாலையில் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுவதும் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story