வீட்டில் தூங்கியவர் மர்மமான முறையில் சாவு


வீட்டில் தூங்கியவர் மர்மமான முறையில் சாவு
x

வீட்டில் தூங்கியவர் மர்மமான முறையில் இறந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

வீட்டில் தூங்கியவர் மர்மமான முறையில் இறந்தார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தினப்பள்ளி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 47). இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். வெளிநாட்டில் பல வருடங்களாக வேலை செய்து வந்த ரவிச்சந்திரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணவேணி ஆந்திர மாநிலம் தனது தாயர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ரவிச்சந்திரன் தனது வீட்டில் மயங்கி நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நிலையில் அடிபட்டு மர்மமான முறையில்இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக சகோதரி அமுதா கொடுத்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story