விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பலி


விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பலி
x
தினத்தந்தி 21 Sep 2023 7:15 PM GMT (Updated: 21 Sep 2023 7:15 PM GMT)

விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பலியானார்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் புதூர் பகுதியை சேர்ந்தவர் வீரசங்கர்(வயது 24). இவர் படமாத்தூரில் உள்ள தனியார் வங்கியில் லோன் கலெக்சன் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு இரவு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பூவந்தி அடுத்த கலுங்குப்பட்டி அருகே வந்த போது, எதிரே வந்த தேளியைச் சேர்ந்த திருமலை (48) என்பவர் மோட்டார்சைக்கிளும், வீரசங்கர் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வீரசங்கர் பரிதாபமாக இறந்தார். திருமலை படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story