விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது


விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
x

கூடலூரில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்

தேனி

கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா மற்றும் போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் நடந்து வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கூடலூர் பழைய போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 48) என்பதும், பையில் விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 62 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story