பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x

பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை

பொதட்டூர்பேட்டை,

பள்ளிப்பட்டு தாலுகா மேளப்பூடி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 46). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரதீப் (16), பிரவீன் (15), பிரகாஷ் (13) என்ற 3 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி செல்வி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் இவர் தனியாக 3 மகன்களையும் பராமரித்து வருகிறார். இவரது மகன் பிரதீப் பிளஸ்-1 வகுப்பும், பிரவீன் 10-ம் வகுப்பும், பிரகாஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் இளையமகன் பிரகாஷ் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சிவகுமார் மகனை பள்ளிக்கு சென்று ஒழுங்காக படிக்கும்படி கண்டித்தார்.இதனால் மன வேதனை அடைந்த பிரகாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தந்தை சிவகுமார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பொதட்டூர்பேட்டை போலீசார் மாணவன் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தை பள்ளிக்கு செல்லும் படி கண்டித்ததால் தான் மாணவன் தற்கொலை செய்து கொண்டானா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story