பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2023 6:45 PM GMT (Updated: 13 May 2023 6:45 PM GMT)

சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் செம்பராம்பட்டு பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரியாயி கோவில் அருகில் பணம் வைத்து சூதாடியதாக செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 44), நீதிவளவன்(35), சக்கரை(60), ஜெய்கணேஷ்(30), பிரசாந்த்(30) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம், புள்ளி தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story