பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:45 PM GMT)

பொள்ளாச்சியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி மரபேட்டை மார்க்கெட் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இதில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சண்முகராஜ் (வயது 42), நிர்மல் ராஜ் (42), ஆனந்த், ரமேஷ்குமார், சாகுல் ஹமீது ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுகள், ரூ.56 ஆயிரத்து 300-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story