ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 7 Dec 2022 6:47 PM GMT)

தக்கலை அருகே ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஆட்டோ நிறுத்தும்படி சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளில் 400 கிலோ ேரஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story