சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது


சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
x

ஆம்பூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கூர்மாபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து சாராயம் விற்றுக் கொண்டிருந்த கோபிநாத் (வயது 48), குப்புராஜாபாளையம் பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பார்வதி (61) ஆகியோரை போலீசார் கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஆம்பூர் தாலுகா மற்றும் டவுன் போலீசார் நடத்திய சோதனையின்போது சாராயம் விற்ற சோமலாபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (28), ஆம்பூர் பி.எம்.எஸ். கொல்லை பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story