ஆட்டோவில் கடத்த முயன்ற 350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


ஆட்டோவில் கடத்த முயன்ற 350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x

ஆட்டோவில் கடத்த முயன்ற 350 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் விரிவிளை சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட 2 ஆட்டோக்கள் சந்தேகப்படும்படியாக வந்தது. உடனே போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டி சென்றனர். பின்னர் மடக்கி பிடித்த போது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் ஆட்டோவை சோதனை செய்ததில் 350 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் கேன்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை டிரைவர்கள் கேரளாவுக்கு கடத்த முயன்றுள்ளனர். தொடர்ந்து ஆட்டோக்களுடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story