கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது


கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
x

அரக்கோணம், தக்கோலத்தில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து தடுக்கும் பணியில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நேற்று மோசூர், செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செய்யூர் கல்குவாரி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த காமேஷ் (வயது 23), செய்யூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

அதேபோன்று தக்கோலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தக்கோலம், அனந்தாபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனந்தாபுரம் ஆற்று பாலம் அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story