தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. மேலும், இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு பதிலாக 10.06.2023 2-ம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story