ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு


ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமாி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய வருகிற செப்டம்பர் மாதம் 23-ந் தேதியன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். அதே சமயம் 29-ந் தேதியன்று அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

---


Next Story