அரவைக்காக 2000 டன் நெல்


அரவைக்காக 2000 டன் நெல்
x

அரவைக்காக 2000 டன் நெல்

திருவாரூர்

நீடாமங்கலத்தில் இருந்து கோவைக்கு அரவைக்காக 2000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

2 ஆயிரம் டன் நெல்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர்

சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக கோவைக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

பேரளம்

நன்னிலம், வலங்கைமான், குடவாசல் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நெல்மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ெரயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக வேலூருக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story