வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது31). இவர் 4 வயது சிறுமிக்கு கடந்த 5.9.21 அன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பாலியல் தொல்லை கொடுத்த பெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story