சிறுவனுக்கு பாலியல் தொல்லை-2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை


சிறுவனுக்கு பாலியல் தொல்லை-2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 24). இவரும் அதேபகுதியை சேர்ந்த நம்புகாளீஸ்வரன் (24) என்பவரும் கடந்த 2021-ம் ஆண்டு 8 வயது சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்களாம். இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத் மேற்கண்ட 2 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.


Next Story