சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x

மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே தருமபுரம் சாலை ஆலமரத்தடி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காவிரிக்கரையில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் வீரமணி (வயது 27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல, மயிலாடுதுறை ரயிலடி மேம்பாலம் அருகே சாராயம் விற்றுக் கொண்டிருந்த தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆலவெளி புதுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பாக்யராஜ் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story