போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 1,831 பேர் எழுதினர்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 1,831 பேர் எழுதினர்
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 1,831 பேர் எழுதினர்

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 1,831 பேர் எழுதினர்

எழுத்து தேர்வு

தமிழகம் முழுவதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று 2-ம் கட்டமாக நடைபெற்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த எழுத்து தேர்வு 3 தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 2,201 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,831 பேர் தேர்வு எழுதினர். 370 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணியில் இருந்து 12.30 மணி வரை மெயின் எழுத்து தேர்வும், 3.30 மணி முதல் 5.10 மணி வரை மொழி தேர்வும் நடைபெற்றது.

ஐ.ஜி.ஆய்வு

திருவாரூரில் 3 தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை சென்னை ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேசி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story