திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை


திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை
x

திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

திருச்சி

அண்ணா பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளையொட்டி சிறைகளில் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதன்பேரில், ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் கைதிகளாக இருந்த ராஜா, சுந்தர்ராஜன், சாமிநாதன், ராமதாஸ், சின்னத்தம்பி, நாகேந்திரன், ரமேஷ், நாகராஜ், சுதாகர், ரஞ்சித்குமார், பச்சையப்பன், சாமிதுரை மற்றும் ெவண்ணிலா, சாந்தி என்ற 2 பெண்கள் என மொத்தம் 14 பேர் நேற்று காலை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக சிறை கைதிகள் யாரும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படாத நிலையில் இந்தாண்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story