தியாகராயநகரில் தனியார் அடகு நிறுவனத்தில் ரூ.14 லட்சம் நகை-பணம் கையாடல்; பெண் உதவி மேலாளர் மீது வழக்குப்பதிவு


தியாகராயநகரில் தனியார் அடகு நிறுவனத்தில் ரூ.14 லட்சம் நகை-பணம் கையாடல்; பெண் உதவி மேலாளர் மீது வழக்குப்பதிவு
x

தனியார் அடகு நிறுவனத்தில் ரூ.14 லட்சம் நகை-பணம் கையாடலில் பெண் உதவி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை

சேலம், ஈரோடு நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் சென்னை தியாகராயநகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் அந்த நிறுவனத்தின் ஆடிட்டர்கள் கணக்கு, வழக்குகளை சரிபார்த்தனர். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் அடமானம் வைத்திருந்த உண்மையான நகைகளை எடுத்துவிட்டு, போலியான நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 14 வாடிக்கையாளர்களுக்கு நகைகளின் மதிப்பைவிட கூடுதலாக நகை கடன் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் ரூ.14 லட்சம் நகை-பணம் கையாடல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தியாகராயநகர் கிளையின் உதவி மேலாளர் பாக்கியலட்சுமி மீது பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் பாக்கியலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story