வெறி நாய்கள் கடித்து 13 ஆடுகள் செத்தன
வெறி நாய்கள் கடித்து 13 ஆடுகள் செத்தன.
கரூர்
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள கொள்ளுதண்ணிபட்டியை சேர்ந்தவர் ஜான்விக்டர். இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 13 செம்மறி ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜான்விக்டர் இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். மேலும் அரசு நிதிஉதவி வழங்கி உதவுமாறு ஜான்விக்டர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story