நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 11 பேர் காயம் - முதியவர் பலி


நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 11 பேர் காயம் - முதியவர் பலி
x

நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 11 பேர் காயம் அடைந்த நிலையில் முதியவர் உயிரிழப்பு.

ஜோலார்பேட்டை,

கிருஷ்ணகிரியிருந்து வாணியம்பாடி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் நாட்டறம்பள்ளி சண்டியூர் மேம்பாலத்தில் சென்று போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி எதிர் திசையில் வாணியம்பாடி இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில இரண்டு காரில் இருந்த 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில் முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

விபத்து குறித்த அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்த முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

இந்த விபத்தில் பெங்களூரு பகுதியை சேர்ந்த நரசிம்மன்(வயது 92) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த உள்ளார். படுகாயம் அடைந்த 11 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர. விபத்து தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story