வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கன்னி தமிழ்நாட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சசிராஜ் (வயது 21), பெட்ரோல் பங்க் ஊழியர். இவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10.4.2021 அன்று சசிராஜ், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி சிறுமி, நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிராஜை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ரூ.5 லட்சம் இழப்பீடு

இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சசிராஜிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் அரசின் ஏதாவது ஒரு நிதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story