திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக தங்கம் கடத்தல் குறைந்திருந்த நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் திருச்சி விமான நிலையத்தில் 929 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் ரூ.37 லட்சத்து 97 ஆயிரத்து 604 மதிப்புள்ள 623 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று சார்ஜாவிலிருந்து நேற்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடலில் சுமார் ரூ.18 லட்சத்து 79 ஆயிரத்து 458 மதிப்பிலான 306.5 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் அடுத்தடுத்து வந்த விமானங்களில் சுமார் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story