மும்பை- ஷீரடி, சோலாப்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தானே, கல்யாணில் நின்று செல்லும் - மத்திய ரெயில்வே அறிவிப்பு


மும்பை- ஷீரடி, சோலாப்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தானே, கல்யாணில் நின்று செல்லும் - மத்திய ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2023 7:45 PM GMT (Updated: 2 Aug 2023 7:46 PM GMT)

மும்பை-ஷீரடி, சோலாப்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் தானே, கல்யாண் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை,

மும்பை-ஷீரடி, சோலாப்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் தானே, கல்யாண் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்

மும்பை சி.எஸ்.எம்.டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மும்பைக்கு அடுத்தப்படியாக நாசிக் ரோடு ரெயில் நிலையத்தில் தான் நிறுத்தப்படுகிறது. இடைப்பட்ட ரெயில் நிலையமான தானே, கல்யாணில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுவதில்லை. இதனால் தானே மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்திற்கு வர வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தானே எம்.பி. ராஜன் விச்சாரே மத்திய ரெயில்வேக்கு கோரிக்கை ஒன்று விடுத்திருந்தார். அதில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

நாளை முதல் நிறுத்தம்

இதன்படி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதாக மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், "சி.எஸ்.எம்.டி-ஷீரடி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தானே ரெயில் நிலையத்தில் காலை 6.49 மணி அளவில் நிறுத்தப்படும். 2 நிமிடம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு கல்யாண் ரெயில் நிலையத்திற்கு 7.11 மணி அளவில் சென்றடையும். அங்கு 2 நிமிடங்கள் நிறுத்திய பின்னர் 7.13 மணி அளவில் புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக வரும் ரெயில் நேரப்படி கல்யாணிற்கு இரவு 9.45 மணிக்கும், தானேவிற்கு 10.06 மணிக்கும் நிறுத்தப்படும். இதேபோல சி.எஸ்.எம்.டி-சோலாப்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தானேயில் 4.33 மணிக்கும், கல்யாணில் 4.53 மணிக்கும் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக தானேயில் காலை 11.50 மணி அளவில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story