'பப்ஜி'யில் அறிமுகமான பெண் பலாத்காரம் - வாலிபர் கைது


பப்ஜியில் அறிமுகமான பெண் பலாத்காரம் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 July 2023 7:00 PM GMT (Updated: 25 July 2023 7:00 PM GMT)

‘பப்ஜி’யில் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

'பப்ஜி'யில் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பலாத்காரம்

மும்பையை சேர்ந்த 33 வயது பெண் கடந்த 2020-ம் ஆண்டில் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடி உள்ளார். அப்போது 'பப்ஜி' மூலமாக 35 வயது வாலிபருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதன்பின்னர் தனியார் நிறுவனத்தில் 2 பேரும் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தனர். அப்போது வாலிபர் அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதை வைத்து கொண்டு தன்னிடம் உல்லாசமாக இருக்க மறுத்தால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக பெண்ணை மிரட்டி உள்ளார்.

கைது

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாலிபரை தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். இதற்கு வாலிபர் மறுத்ததால் அப்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மும்பை போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கற்பழிப்பு, திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்ளுதல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story