மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது


மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2023 8:00 PM GMT (Updated: 6 Aug 2023 8:00 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள்

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சுங்க வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி வைத்திருந்த உடைமைகளில் நடத்திய சோதனையில் சந்தேகம் படும்படியான பார்சல் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதனை பிரித்து பார்த்ததில் 1 கிலோ 85 கிராம் எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் போதைப்பொருளை பறிமுதல் செய்து அந்த பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ரூ.19 கோடி

பறிமுதல் செய்த போதைப்ெபாருளான கொகைனின் மதிப்பு ரூ.19 கோடி ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பயணியை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.13 கோடி மதிப்புள்ள கொகைனை கடத்தி வந்தவர் பிடிபட்டார். தற்போது 2-வது சம்பவமாக ரூ.19 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story