வீடு புகுந்து வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு


வீடு புகுந்து வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Sep 2022 5:30 AM GMT (Updated: 22 Sep 2022 5:30 AM GMT)

மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் வீடு புகுந்து வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு

தானே,

மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை சேர்ந்தவர் முகமது வாசித் (வயது 20). இவர் மும்ரா கவுசா பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை அடையாளம் தெரியாத ஆசாமி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார். இது குறித்து சீல்டைகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மும்பை பாந்திராவை சேர்ந்த சனிப் சாகி தனது கூட்டாளி ஜாகிர் சேக்குடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சனிப் சாகியை நேற்று கைது செய்தனர்.

போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் மால்டாவை சேர்ந்த சனிப் சாகியின் சகோதரர் வகித் என்பவரை கடந்த 3 ஆண்டுக்கு முன்பு முகமது வாசித் கொலை செய்யதுள்ளார். இதற்கு பழிக்கு பழியாக அவரை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ஜாகிர் சேக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story