அந்தேரியில் அடுக்குமாடி கட்டிடத்தையொட்டி திடீர் நிலச்சரிவு; குடியிருப்புவாசிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தையொட்டி திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக குடியிருப்புவாசிகள் உயிர் தப்பினர்
மும்பை,
மும்பை அந்தேரி கிழக்கு மகாகாளி சாலையில் 8 மாடி கொண்ட ராம்பாக் கோ-ஆபரேடிவ் வீட்டு வசதி சங்க கட்டிடத்தின் பின்புறம் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி பேரிடர் மேலாண்மை துறை மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 168 வீடுகள் கொண்ட வீட்டு வசதி சங்க கட்டிடத்தின் பின்புறம் உள்ள மலைப்பகுதியில் இருந்து மண் மற்றும் கற்கள் விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையைாக அங்கு வசித்து வரும் 168 குடும்பங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story