அழகியுடன் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளர் கைது

மாடல் அழகியுடன் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மாடல் அழகியுடன் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
காரை ஏற்றினார்
மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந் தேதி இந்தி பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். இதை சினிமா தயாரிப்பாளரின் மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் பார்த்து விட்டார்.
வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர் கணவரிடம் தட்டிக்கேட்டார். இதனால் கணவர், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சினிமா தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் அங்கிருந்து தப்பிக்க முன்றார். அப்போது அவரது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றபோது திடீரென தவறி விழுந்தார். எனினும் தயாாிப்பாளர் தனது மனைவி என்றும் பாராமல் அவர் மீது காரை ஏற்றிவிட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.
கார் ஏறியதில் யாஷ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கைது
இதற்கிடையே தயாரிப்பாளர், மனைவி மீது காரை ஏற்றி செல்லும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் கமல் கிஷோர் மிஸ்ராவை நேற்று முன்தினம் விசாரணைக்காக அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு நேற்று அதிகாலை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
கைதான கமல் கிஷோர் மிஸ்ரா இந்தியில் வெளியான 'தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
மனைவி மீது கார் ஏற்றிய வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.