ஏக்நாத் ஷிண்டே அணி செய்தது தாக்கரேக்கு எதிரான கலகம் அல்ல, துரோகம்- சிவசேனா எம்.எல்.சி. ஆவேசம்


ஏக்நாத் ஷிண்டே அணி செய்தது தாக்கரேக்கு எதிரான கலகம் அல்ல, துரோகம்- சிவசேனா எம்.எல்.சி. ஆவேசம்
x

ஏக்நாத் ஷிண்டே அணி செய்தது உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான கலகம் அல்ல, துரோகம் என சிவசேனா எம்.எல்.சி. கூறியுள்ளார்.

மும்பை,

ஏக்நாத் ஷிண்டே அணி செய்தது உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான கலகம் அல்ல, துரோகம் என சிவசேனா எம்.எல்.சி. கூறியுள்ளார்.

மோடி உங்கள் தலைவரா?

சிவசேனா எம்.எல்.சி. அம்பாதாஸ் தான்வே அவுரங்காபாத்தில் பேசியதாவது:-

கட்சியின் தலைவருக்கு (உத்தவ் தாக்கரே) எதிராக செயல்படும் போது இதை கலகம் என எப்படி கூறமுடியும். இது துரோகம். அதிருப்தி அணியினர் இதை உள்கட்சி பிரச்சினை என சொன்னார்கள். அப்போது ஏன் அவர்கள் டெல்லியில் பா.ஜனதா தலைவர்களை சந்திக்க வேண்டும். பிரதமர் மோடியும், அமித்ஷாவும், ஜே.பி. நட்டாவும் உங்கள் தலைவர்களா?.

ஏக்நாத்ஷிண்டே அணி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டது கலகம் அல்ல. உத்தவ் தாக்கரே, சிவசேனாவுக்கு செய்த துரோகம். சிவ் சம்வாத் யாத்திரையில் ஆதித்ய தாக்கரேவுக்கு கிடைத்த வரவேற்பு அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்களுக்க நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஷிண்டே பாதுகாப்பு விவகாரம்

இதேபோல ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடந்த மகாவிகாஸ் ஆட்சியில் இசட் பிரிவு பாதுகாப்பு மறுக்கப்பட்டதில், மாதோஸ்ரீயின் தலையீடு உள்ளது என அவரது ஆதரவு எம்.எல்.ஏ. சுகாஸ் கண்டேவின் குற்றச்சாட்டை மறுத்த அம்பாதாஸ் தன்வே, " இதுபோன்ற பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக யார் முடிவு செய்யவார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாநில உள்துறை மந்திரி எப்படி, கேபினட் மந்திரியின் பாதுகாப்பு குறித்த முடிவுகளை எடுக்க முடியும்?. ஆதித்ய தாக்கரேவுக்கு மக்கள் இடையே வரவேற்பு கிடைப்பதை பார்த்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன " என்றார்.


Next Story