எம்.எல்.ஏ.க்களை கண்டித்த ஏக்நாத் ஷிண்டே


எம்.எல்.ஏ.க்களை கண்டித்த ஏக்நாத் ஷிண்டே
x
தினத்தந்தி 2 July 2022 6:19 PM GMT (Updated: 2 July 2022 6:56 PM GMT)

மேஜையில் ஏறி ஆட்டம் போட்ட எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கண்டித்தார்.

மும்பை,

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே கடந்த வியாழக்கிழமை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இதை கோவா ஓட்டலில் தங்கி இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி கொண்டாடினர். சிலர் மேஜைகள் மீது ஏறியும் ஆட்டம் போட்டனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி எதிர்மறையான விமா்சனங்களை சந்தித்தது.

இந்தநிலையில் ஆட்டம்போட்ட எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கண்டித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிருப்தி எம்.எல்.ஏ. அணி செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறுகையில், " எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடு குறித்து சில எதிர்மறை கருத்துக்கள் வந்துள்ளது புரிந்து கொள்ள முடிந்தது தான். சந்தோஷத்தில் எம்.எல்.ஏ.க்கள் செய்தது சரியல்ல. எம்.எல்.ஏ.க்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுமாறு ஏக்நாத் ஷிண்டே கூறினார் " என்றார்.


Next Story