ரூ.1.10 கோடி எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியுடன் டிரைவர் தப்பி ஓட்டம்


ரூ.1.10 கோடி எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியுடன் டிரைவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2023 7:30 PM GMT (Updated: 26 Aug 2023 7:30 PM GMT)

ஆமதாபாத்தில் ரூ.1.10 கோடி எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியுடன் டிரைவர் தலைமறைவு

மும்பை,

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து தானே மாவட்டம் பிவண்டி, சாகர் காம்பிளக்ஸ் பகுதிக்கு கடந்த 17-ந் தேதி கன்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியில் ஆப்பிள் ஐபோன், ஐபேடு என ரூ.1.10 கோடி மதிப்பிலான செல்போன், எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தன. லாரியை உத்தரபிரதேச மாநிலம் மாதுராவை சேர்ந்த ரபிக் மெகபூப் ஓட்டி வந்தார். மறுநாள் லாரி பிவண்டி வந்து சேரவில்லை. விசாரணையில் டிரைவர் ரூ.1.10 கோடி பொருட்களுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதுதொடர்பாக நார்போலி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1.10 கோடி செல்போன், எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியுடன் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story